4 இயக்குனர்கள் நடிப்பில் உருவாகும் இசை

இயக்குனராக அறிமுகமாகி, நடிகரானவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் இயக்கி, நடித்து வரும் இசை வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால் முதன்முறையாக இசையமைப்பாளர் பணியையும் எஸ்.ஜே.சூர்யா ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த படத்தில் அவருடன் சேர்த்து மொத்தம் 4 இயக்குனர்கள் நடிக்கவுள்ளனர்.

இது குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறுகையில் இசை திரைப்படம், சினிமா தொடர்புடைய கதையாகும். இதனால் படத்தில் நான்கு இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அதில் இயக்குனர் விஸ்வநாதன் ஒரு ரோலில் நடிப்பதாகவும் மற்ற இயக்குனர்கள் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும் இசை படத்தின் ஒரு பாடலில் இந்தி நடிகை ஆட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...