ஆயா வடை சுட்ட கதையும் சினிமாவாகிறது


பாட்டி பேரன்களுக்கு சொன்ன கதையில் ரொம்ப பாப்புலர், ஆயா வடை சுட்ட கதை. ஆயா சுட்ட வடைய காக்கா திருடிச் செல்வதும், காக்காவிடம் இருந்து நரி ஏமாற்றி பறிப்பதுமான கதையில் பல தத்துவங்கள் இருக்கிறது.

இந்த தத்துவத்தை அடிப்படையாக வைத்து ஆயா வட சுட்ட கதை என்ற பெயரிலேயே ஒரு படம் எடுக்கிறார்கள். "ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 100 குடும்பம் இருக்குதுன்னா. 

அதுல ஒரு குடும்பத்துக்கு ஒரு நாலைஞ்சு குடும்பத்தைத்தான் தெரியும். ஆனால் பால்போடுறவங்க, தண்ணி கேன் சப்ளை பண்றவங்க, செக்யூரிட்டி ஆகியோர் எல்லாரையும் தெரியும். 

இத வச்சிக்கிட்டு அப்பார்ட்மெண்டுக்குள்ள ஆயா வட சுட்ட கதைய சொல்றோம். இதுல யார் ஆயா, யார் நரி, யார் காக்காங்கறது படம் பார்க்கும்போது தெரியும். புல்அண்ட் புல் காமெடி படம் கொஞ்சம் காதலும் இருக்கு" என்கிறார் டைரக்டர் பனிந்ரா.

அவிடேஜ் என்கிற நியூபேஸ் ஹீரோ. சுபர்னாங்க மாடல் அழகி ஹீரோயினா அறிமுகமாகுறாங்க. இவர்கள் தவிர நடிக்கிற அத்தனை பேருமே புதுமுகங்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...