விஜயகாந்துக்காக சினிமா தயாரிப்பதை நிறுத்திய தயாரிப்பாளர்

நடிகரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உத்தரவுக்கிணங்க பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தனது சினிமா தயாரிப்பு கம்பெனியை மூடி விட்டார்.

தென்மேற்கு பருவக்காற்று போன்ற நல்ல படங்களை வெளியிட்ட பெருமைக்கு சொந்தக்காரரான மைக்கேல் ராயப்பன் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வெற்றிபெற்ற கையோடு அடுத்தடுத்த படங்களை தயாரிக்கலாம் என்று நினைத்திருந்த மைக்கேல் ராயப்பனுக்கு அதிர்ச்சி கொடுப்பதுபோல கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஒரு அதிரடி உத்தரவை
பிறப்பித்துள்ளார்.

ஒரு வருஷத்துக்கு மக்கள் பணிகளை மட்டும் பாருங்க. உங்க தொகுதியை சுற்றி சுற்றி வாங்க. மக்கள் மத்தியில் நற்பெயர் எடுப்பதுதான் முக்கியம். அதற்கு பிறகுதான் சினிமா உள்ளிட்ட மற்றதெல்லாம் என்று தடாலடியாக உத்தரவு போட்டிருக்கிறார் விஜயகாந்த்.

கட்சித்தலைமையின் உத்தரவை மீற முடியுமா என்ன? மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பு நிறுவனம் சுமார் ஒரு வருட காலத்திற்கு தனது தயாரிப்பை தள்ளிப் போட்டிருக்கிறது. சென்னையில் ஒரு லட்சம் ரூபாய் வாடகைக்கு அமர்த்தியிருந்த ஆபீசையும் காலி செய்தாகி விட்டது என்பது கூடுதல் தகவல்.

நல்லது நடந்தா சரிதான்!

1 comments:

Unknown said...

gud.......

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...