மகனுக்கு கதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த விஜயகாந்த்

தனது மகனை ஹீரோவாக களமிறக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் நடிகர் விஜயகாந்த், மகனுக்காக இயக்குநர் ஒருவரிடம் கதை கேட்க, அவ‌ர் சொன்ன கதையை கேட்டு விழுந்து, விழுந்து சிரித்தாராம்.

முழுநேர அரசியல்வாதியாக எதிர்கட்சி தலைவராக ஆகிவிட்ட நடிகர் விஜயகாந்த் கொஞ்சம், கொஞ்சமாக சினிமாவை விட்டு விலகி வருகிறார்.

அதேசமயம், தன்னுடைய மகன் சண்முகபாண்டியனை ஹீரோவாக்கும் முயற்சியில் விஜயகாந்த், அவரது மனைவி பி‌ரேமலதா, மைத்துனர் எல்.கே.சுத்தீஷ் உள்ளிட்ட மொத்த குடும்பமே ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல டைரக்டர்களிடம் கதையும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் டைரக்டர் பூபதி பாண்டியன் ஒரு கதை சொல்ல விஜயகாந்த் வீட்டிற்கு சென்றாராம்.

அப்போது அவரின் கதையை விஜயகாந்தின் மொத்த குடும்பமும் உட்கார்ந்து கேட்டதாம். கதையை கேட்ட பின்னர் விஜயகாந்த் உள்ளிட்ட அனைவரும் விழுந்து, விழுந்து சிரித்தனராம்.

மேலும் கதை பிடித்து போக, அடுத்த கட்ட வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம் விஜயகாந்த்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...