சீரியசான நடிகரை சிரிப்பு நடிகராக்கிய கேரளத்து பைங்கிளி


சுப்பிரமணியபுரம் படத்தில் நடித்தபோதே அப்பட நாயகியுடன் அந்த இரண்டெழுத்து நாயகனுக்கு காதல் புகைச்சல் இருப்பதாக செய்தி பரவியது. 

ஆனால், அதையடுத்து எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது அந்த நான்கெழுத்து நடிகையுடன் காதல் பத்திக்கொண்டதாக மைக் வெச்சு ஒலிபரப்பாத குறையாக ஆளாளுக்கு பரப்பி விட்டுக்கொண்டு திரிந்தார்கள். 

ஆனால், அதற்கு நடிகைமறுப்பு சொன்னபோதும் எந்தவித ரியாக்சனும் இல்லாமல் இருந்தார் மேற்படி நடிகர்.

அதன்பிறகு இப்போது காதல் என்னும் நிக்கா, ராஜா ராணி படங்களில் நேரம் பட நாயகியுடன் இணைந்து மேற்படி நடிகர்,இந்த முறை முன்பு மாதிரி விளையாட்டாக இல்லாமல் படு சீரியசாகவே காதல் வலை வீசி வந்தாராம். ஆனால், அம்மணி கழுவுற மீனில் நழுவுற ரகம் என்பதால் சிக்காமலேயே டேக்கா கொடுத்து வந்திருக்கிறார்.

இருப்பினும் என்றாவது ஒருநாள் சிக்காமலா போகும் என்று தொடர்ந்து தூண்டிலை போட்டே வைத்திருந்திருக்கிறார் நடிகர். அப்படியிருக்கும்போதுதான், மேற்படி நடிகருடன் நேரம் நாயகியை மீண்டும் இணைக்க ஒரு கதையுடன் சென்றிருக்கிறார் கோலிவுட் இயக்குனர் ஒருவர். 

ஆனால், மொத்த கதையையும் கேட்ட நடிகை, இந்த கதைக்கு மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் சூப்பரா இருப்பார் என்று படத்தை அவர் பக்கம் திருப்பி விட்டாராம்.

இந்த விசயம் இரண்டெழுத்து நடிகரின் காதுகளுக்கு சென்றபோது கடுப்பாகி விட்டாராம். நம்மளை கடுப்பேத்தினது மட்டுமில்லாம, சிரிப்பு நடிகராக்கிட்டு போயிட்டுதே அந்த நடிகை என்று சிலிர்த்துக்கொண்டு நிற்கிறாராம் நடிகர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...