வானம் படத்தின் பஞ்சபூதங்கள்

சிம்பு நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் "வானம்" படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே இப்படத்தில் நடித்திருப்பவர்களை பஞ்சபூதங்கள் என்று கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ்.


தெலுங்கில் வெளியாகி மாபெரும் ஹிட்டான "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், சரண்யா, சோனியா அகர்வால் என்று ஒரு நட்சத்‌திர பட்டாளமே நடித்துள்ளது.


வேதம் படத்தை இயக்கிய க்ரிஷ், வானம் படத்தையும் இயக்கி இருக்கிறார். வி.டி.வி. சார்பில் கணேஷ் தயாரிக்கிறார். இறுதி கட்டத்தை எட்டியுள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே வானம் படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்களை பஞ்சபூதங்கள் என்று கூறி வர்ணிக்கிறார் தயாரிப்பாளர் ‌கணேஷ்.


அதன்படி காதலுக்காக எதையும் செய்யும் கேபிள் ராஜாவாக வரும் சிம்புவை(ஆகாயம்) என்றும், பாடகர் பரத் சக்கரவர்த்தியாக வரும் பரத்தை(காற்று) என்றும், பாலியல் தொழிலாளி சரோஜாவாக வரும் அனுஷ்காவை(நீர்) என்றும், பொதுமக்கள் நலனுக்காக பாடுபடும் பிரகாஷ்ராஜ்யை(நெருப்பு) என்றும், வறுமையை போக்க பிழைப்பு தேடி கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் சரண்யாவை(பூமி) என்கிறார்.


பஞ்சபூதங்கள் போல், இவர்கள் ஐந்து பேரும் தான் படம் முழுக்க பயணித்து தங்களது வாழ்வில் எப்படி வெற்றி பெறுகின்றனர் என்பதை மிக அழகாக படமாக்கி இருக்கும் படம் தான் வானம். இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...