மூன்று மொழிகளில் அர்ஜூன் நடிக்கும் காட்டுபுலி

கபிஷேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிட் தயாரிப்பில், ஆக்ஷன் கிங் அர்ஜூன், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து உருவாகும் படம் "காட்டுபுலி". இப்படத்தை கத்தார், வீர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இந்திபடங்களில் சண்டை இயக்குநராக பணியாற்றிய டினு வர்மா முதன்முறையாக அர்ஜூனை வைத்து இப்படத்தை இயக்குகிறார்.

உடற்பயிற்சி கூடம் ஒன்றில் அர்ஜூனை முதன்முதலாக சந்தித்த டினு வர்மா, அர்ஜூனின் ஒர்க்கிங் ஸ்டைலை பார்த்து பிடித்துபோய் தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு காட்டுபகுதியில் த்ரில்லர் நிறைந்த படமாக காட்டுபுலி படத்தை இயக்கி வருகின்றனர்.

ரஜினீஷ் - சாயாலி பகத், அமீத் - ஹனாயா, ஜஹான்-ஜெனிபர் ஆகிய மூன்று ஜோடிகள் காட்டுக்குள் ஒரு ட்ரிப் போகிறார்கள். அங்கே ஒரு முக்கியமான நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அப்போது அர்ஜூன் - பிரியங்கா தேசாய் ஜோடியையும் அவர்களின் மகள் தன்யாவையும் சந்திக்கிறார்கள். காட்டுபகுதியில் அவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியிலிருந்து அர்ஜுன் எப்படி அவர்களை காப்பாற்றிக் கொண்டுவருகிறார் என்பது கதை.

தலைக்கோணம் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் தங்கியிருந்து இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள். ராட்சத பல்லி, சிறுத்தைப் புலி, அட்டை, விஷப் பாம்புகள் என காட்டின் அத்தனை கொடிய விலங்குகளின் அச்சுறுத்தலுக்கும் மத்தியில் துணிந்து இந்தப் படத்தை படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தில் 50 குதிரைகள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தக் குதிரைகளைத் தேடி சிறுத்தைப் புலிகள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. இவற்றிடமிருந்து பாதுகாக்க ஏராளமான காவலர்களை நியமித்து குதிரைகளைப் பார்த்துக் கொண்டார்கள் காட்டுப் புலி குழுவினர்.

அர்ஜூனுக்கு மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் படங்களில் இந்த காட்டுபுலி படமும் நிச்சயம் சேரும் என்பதில் சந்தேகமில்லை என்கின்றனர் காட்டுபுலி குழுவினர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...