நயன்தாரா சீதையாக நடித்த படம் 17ம்தேதி ரிலீஸ்

நடிகர் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவியா ஆகப்போகும் நடிகை நயன்தாரா கடைசியாக சீதை வேடத்தில் நடித்திருக்கும் ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் வருகிற 17ம்தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது.

நயன்தாரா கடந்த ஆகஸ்டு மாதம் கிறிஸ்தவ மதத்தில் இருந்து, இந்து மதத்துக்கு மாறினார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆர்யசமாஜத்துக்கு சென்று ஹோமம் வளர்த்து மந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார்.

பிரபுதேவாவுக்கும்-நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. பிரபுதேவா இந்து என்பதால் அவர் மதத்துக்கு மாறி விட்டார்.

அத்துடன் தெலுங்கில் கடைசியாக `ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற படத்தில் சீதை வேடத்திலும் நடித்தார். இப்படத்தில் ராமராக பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.

படப்பிடிப்பு முடியும் வரை நயன்தாரா அசைவ உணவு சாப்பிடவில்லை. சீதை கேரக்டருக்காக விரதம் இருந்து நடித்தார். இந்த படத்தில் நடிக்க பிரபுதேவாவிடம் விசேஷ அனுமதியும் பெற்று இருந்தார்.

படப்பிடிப்பில் கடைசி நாளில் எல்லோருக்கும் கண்ணீர் மல்க வணக்கம் தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றார். படப்பிடிப்பு குழுவினர் நயன்தாரா மேல் பூக்களை தூவி வழியனுப்பி வைத்தனர். அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. சினிமாவுக்கு முழுக்க போட்டுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே நயன்தாராவின் ராம ராஜ்ஜியம் படம் வருகிற 17ம்தேதி ரிலீசாகிறது. இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்க நயன்தாரா ஆர்வமாக இருக்கிறார்.

இந்த படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் இடையே போட்டா போட்டியும் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...