ஜோடி சேர காத்திருக்கும் சிம்பு - த்ரிஷா

நடிகர் சிம்புவும், நடிகை த்ரிஷாவும் ஜோடி சேர காத்திருக்கிறார்கள். "அலை" படத்தில் முதல்முறையாக சிம்புவும், த்ரிஷாவும் நடித்தனர். அந்தப்படம் வெற்றி பெறவில்லை.

பல ஆண்டுகள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்த படம் "விண்ணைத்தாண்டி வருவாயா". டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

சிம்பு - த்ரிஷா ஜோடி பேசப்பட்டது. படத்தில் காட்டியதுபோலவே நிஜத்திலும் த்ரிஷாவை விட இளையவர் சிம்பு.

இந்த வயது வித்தியாசமே "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தை வெற்றி பெறச் செய்தது என்றே சொல்லலாம்.

அந்த படத்தை தொடர்ந்து வேறு படங்களில் பிஸியாக இருக்கும் இருவரையும் மீண்டும் இணைத்து படமெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிம்பு கூறுகையில், "த்ரிஷாவுடன் இணைந்து நடிப்பது சந்தோஷமான விஷயம். அப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்," என்றார்.

த்ரிஷா கூறுகையில், "சிம்பு எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். அவருக்கும் எனக்கும் ஆன் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது. அடுத்த பட வாய்ப்புக்கு காத்திருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...