காவலன் படத்துக்கு போலி டிக்கெட் அச்சடிப்பு

காவலன் படத்துக்கு போலி ரசிகர்கள் ஷோ டிக்கெட் அச்சடிக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் அசின் நடித்த காவலன் படம் 15-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 400 தியேட்டர்களில் ரீலிஸ் ஆகிறது. திருச்சியில் கலையரங்கம், மெகா ஸ்டார், திருவானைக்காவல் வெங்கடேஷ்வரா ஆகிய தியேட்டர்களில் ரீலிஸ் ஆகிறது.

காவலன், படம் ரீலிஸ் ஆவதையொட்டி திருச்சி தியேட்டர்கள் முன்பு திருச்சி மாவட்ட தலைவர் ராஜா, திருச்சி மாவட்ட விஜய் நற்பணி மன்ற இளைஞரணி தலைவர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் நடிகர் விஜய் ரசிகர்கள், பேனர்கள், தோரணங்கள் கட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு முறையும், விஜய் படம் ரிலீஸ் ஆகும் போதும் விஜய் ரசிகர்களுக்கு என ரசிகர்கள் காட்சி டிக்கெட்டுக்கள் விநியோகிக்கப்படும். இதற்காக தியேட்டர் உரிமையாளர் அனுமதி பெற்ற டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படவது வழக்கம்.

அந்த டிக்கெட்டுகள், ரசிகர்களுக்கு வழங்கப்படும். இதற்கான மொத்த தொகையை தியேட்டர்காரர்களுக்கு ரசிகர்மன்றத்தினர் செலுத்தி விடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று திருச்சியில் ஒரு அச்சகத்தில் விஜய் ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகளை சிலர் ரசிகர் மன்ற அனுமதியின்றி தியேட்டர்காரர்கள் அனுமதியின்றி, அச்சடிக்கப்படுவதாக புகார் வந்தது. இதை விஜய் ரசிகர்கள் தியேட்டர் மேலாளரிடம் தெரிவித்தனர்.

போலி டிக்கெட்டுகள், விநியோகிக்கப்பட்டால் ரசிகர்கள் ஷோவில் குழப்பம் ஏற்படும் என்பதால் இது குறித்து தியேட்டர் நிர்வாகம் ரசிகர்கள் மன்றம் சார்பில் கண்டோன்மெண்டு உதவி கமிஷனர், காந்தியிடம் புகார் கொடுக்கப்பட்டது.

டிக்கெட் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தில் விசாரித்த போது கோவை, பல்லடம், முகவரி, செல்போன் நெம்பர்களை அந்த நபர் கொடுத்து சென்றாராம்.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...