சந்தன கடத்தல் வீரப்பனாக கிஷோர்

"குப்பி", "காதலர் குடியிருப்பு" போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் ரமேஷ் அடுத்து, மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார். இப்படத்திற்கு வன யுத்தம் என்று பெயரிட்டுள்ளார்.


படம் குறித்து டைரக்டர் ரமேஷ் கூறியதாவது, மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறேன். படத்திற்கு "வன யுத்தம்" என்று பெயரிட்டுள்ளேன்.


வீரப்பன் பற்றிய கதை என்பதால் அவரை பற்றிய தகவல்களை நிறைய சேகரித்து வருகிறேன். படத்தில் வீரப்பனாக பொல்லாதவன் கிஷோர் நடிக்கிறார்.


அதேசமயம் வீரப்பனுக்கு எதிரான போலீஸ் அதிகாரி கேரக்டருக்கு முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியிருக்கிறேன்.


விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். அக்ஷயா கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளனர்.


விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, படப்பிடிப்பு வேலைகள் தொடங்கப்படும் என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...