குள்ளநரி கூட்டத்துடன் மீண்டும் சேர்ந்த விஷ்ணு

வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் விஷ்ணுக்கு முதல்படம் நன்றாக அமைந்தாலும், அதற்கு அடுத்து வந்த பலே பாண்டியா, துரோகி போன்ற படங்கள் நன்றாக அமையவில்லை.


இருப்பினும் மனம் தளராமல் அடுத்து குள்ளநரி கூட்டம் என்ற படத்தில் நடித்தார். தர்ஷன் கிரியேஷன்ஸ் சார்பில் ஆஷிஸ் ஜெயின் தயாரிப்பில், புதுமுக டைரக்டர் ஸ்ரீபாலாஜி இயக்கி இருந்தார்.


விஷ்ணுவின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து இருந்தார். சிலதினங்களுக்கு முன்னர் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் மிகுந்த குஷியில் இருக்கிறார் விஷ்ணு.


இதனிடையே விஷ்ணு மீண்டும் ஆஷிஸ் ஜெயின் தயாரிப்பில், ஸ்ரீபாலாஜியின் இயக்கத்தில் ஒரு படம் பண்ணப்போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து விஷ்ணு கூறுகையில், ஆம், மீண்டும் அதே கூட்டணியுடன் சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கிறேன். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...