அம்மாவிடம் துடப்பக்கட்டையால் அடி வாங்கிய நடிகை


தமிழில் ஜெயம்ரவியுடன் தாம்தூம் என்ற படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத். தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் இவர், மும்பையில் அன்னையர் தினத்தையொட்டி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். 

அப்போது அங்கு வந்த அனைவரும் அவரவர் அம்மாவைப்பற்றி பேச, கங்கணாவும் தனது அம்மாவைப்பற்றி பேசினாராம்.

அப்போது, எல்லா அம்மாக்களும் தங்கள் பிள்ளைகள் குழந்தைகளாக இருக்குமபோது தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் என் அம்மா அப்படி செய்ததில்லை. 

சமஸ்கிருத ஆசிரியையான அவர் ரொம்ப கண்டிசனானவர். பள்ளியில் மாணவ-மாணவியர் அவரைப்பார்த்து பயப்படுவது போலவே நானும் பயப்படுவேன்.

மேலும், வீட்டு வேலைகளான சமைப்பது, பாத்திரம் தேய்ப்பது என அனைத்து வேலைகளையும் நான் செய்திருக்கிறேன்.அந்த வகையில் நடிப்பைத்தவிர அனைத்தையும் என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆனால் ரொம்ப கோபக்காரரான அவர், நான் தவறு செய்கிறபோது பலமுறை என்னை துடப்பக்கட்டையால் அடித்திருக்கிறார் என்று தனது கடந்த காலத்தைப்பற்றி பேசிய கங்ணா ரனாவத், என் அம்மா புண்ணியத்தால் எனக்கு சினிமாவில் பிழைப்பு இல்லையென்றால், வீட்டு வேலை செய்தாவது பிழைத்துக்கொள்வேன் என்று ஜாலியாக பேசி கைதட்டல்களை அள்ளிக்கொண்டாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...