படப்பிடிப்புக்காக குடியிருந்த வீட்டையே கொளுத்திய சசிகுமார்


சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து சசிகுமார் நடித்து வரும் புதிய படம் குட்டிப்புலி. இந்த படத்தில் அவருடன் லட்சுமிமேனன், சரண்யா, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முத்தையா படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. பெண் தான் கடவுள். பெண் தான் வீரம் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இப்படத்தில், தீப்பிடிக்கும் வீட்டிற்குள் இருந்து சசிகுமார் தப்பிச்செல்வது போன்ற ஒரு காட்சியை படமாக்கினார்களாம். அதற்காக ஒரு நபர் குடியிருந்த தனது வீட்டையே தர முன்வந்தாராம்.

இதையடுத்து அந்த வீட்டில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீயை கொளுத்தி படமாக்கியுள்ளனர். அதையடுத்து, வீட்டை படப்பிடிப்புக்காக கொடுக்க முன்வந்த அந்த நபருக்கு அதே இடத்தில் புதிய வீட்டையும் கட்டிக்கொடுத்தார்களாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...