ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்


மலையாளத்தில் கிரிக்கெட் வீரர்களை மையப்படுத்தி உருவாகி வந்த மதுவில்லினட்டம்வரே என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வந்தார் இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த். 

ஆனால் இப்போது அவர் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பதால், அப்படத்தில் இருந்த அவர் நடித்த காட்சிகளை நீக்கியுள்ளனர்.

ஆனால், அதே மலையாள சினிமாவில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் சூதாட்டத்தை மையமாக வைத்து தற்போது ஒரு படம் தயாராகிறது. 

அந்த படத்துக்கு கிரிக்கெட் என்றும் பெயர் வைத்து விட்டனர். அதில் முக்கிய கதாபாத்திரம் ஸ்ரீசாந்த் சம்பந்தப்பட்டதுதானாம். 

அவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்த கிரேஸ், அவர் ஆட்டத்தில் காட்டிய வேகம் தொடங்கி கடைசியில் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கை எப்படியெல்லாம் வீணடித்து விட்டார் என்ற கோணத்தில் கதை செல்கிறதாம்.

அதோடு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டால் இந்த கதையில் திருத்தம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்களாம். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...