தயாரிப்பாளர் பொறுப்பிலிருந்து ஓட்டம் பிடித்த விஜயசேதுபதி


சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்பவர் கமல்ஹாசன். அவருக்குப்பிறகு சமீபகாலமாக தனுஷ், விஷால், சித்தார்த் உள்ளிட்ட சில நடிகர்களும் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இவர்களைப்பார்த்து பீட்சா, சூதுகவ்வும் படங்கள் மூலம் வளர்ந்து வரும் விஜயசேதுபதியும் தான் நடித்து வரும் சங்குதேவன் என்ற படத்திற்கு, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளரானார். அவரது இந்த முயற்சியை பலரும் ஆச்சரியமாக பார்த்தனர்.

சில நாட்களாக படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால், திடீரென்று ஒருநாள் படப்பிடிப்பு நடந்த பிறகு வேலை செய்தவர்களுக்கு அவரால் பேட்டா கொடுக்ககூட முடியவில்லையாம். 

எனக்கு பணம் கொடுத்து வந்த நிறுவனம் திடீரென்று பணம் தருவதை நிறுத்தி விட்டது. என்றாலும், என் கையில் இருந்த பணத்தை போட்டு பல நாட்களாக படப்பிடிப்பை நடத்தினேன். இப்போது என் கையில் இருந்த மொத்த பணமும் கரைந்து விட்டது என்றாராம். 

இதனால், அப்படத்தை முதல் காப்பி அடிப்படையில் தயாரித்து வந்த விஜயசேதுபதி, தனக்கு பணம் கொடுத்து வந்த நிறுவனத்திடமே படத்தை ஒப்படைத்து விட்டாராம். 

இதற்கு மேல் என்னிடம் பணம் இல்லை. இந்த பர்ஸ்ட் காப்பி வியாபாரமெல்லாம் எனக்கு செட்டாகாது. 

அதனால் இனி மொத்த தயாரிப்பு பொறுப்பையும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். என்னை ஆளை விடுங்கள் என்று ஓட்டம் பிடித்து விட்டாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...