கமல் செய்த அதிரடி மாற்றம்

"விஸ்வரூபம்-2 படத்தின், இறுதிக்கட்ட படப்பிடிப்பை, சென்னையில் நடத்தி வருகிறார் கமல். சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா என, முதல் பாகத்தில் நடித்தவர்களே, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகின்றனர். 

ஆனால், தயாரிப்பு பொறுப்பை மட்டும், தன்னிடமிருந்து, வேறு ஒருவரிடம் விற்று விட்டார். மேலும், முதல் பாகத்துக்கு, ஒளிப்பதிவு செய்த சானு வர்க்கீசை நீக்கி விட்டு, இப்போது ஷாம்தத் சைனுதீன் என்பவரை நியமித்துள்ளார். 

அதே போல், "விஸ்வரூபம் படத்துக்கு மூன்று பேர் இணைந்து இசையமைத்தனர். 

ஆனால், இப்போது இரண்டாம் பாகத்துக்கு, ஜிப்ரானை ஒப்பந்தம் செய்துள்ளார்."வாகை சூடவா படத்தில் அறிமுகமான ஜிப்ரான், "வத்திக்குச்சி, குட்டிப்புலி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...