ஒஸ்தியான பப்ளிசிட்டிக்காக சிம்பு ‌கொடுக்கும் பரிசு

ஒரு சினிமா எடுப்பதைவிட, அந்த சினிமாவை பப்ளிசிட்டி செய்வதில்தான் படத்தின் வெற்றியும், தோல்வியும் அடங்கியிருக்கிறது என்பதை சமீபத்திய படங்களின் சில வெற்றிகள் நிரூபித்திருக்கின்றன.

அந்த வகையில் சிம்பு, தான் அடுது்து நடிக்கும் ஒஸ்தி படத்தின் பப்ளிசிட்டிக்காக கல்வியில் ஜெயித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கவுள்ளார்.

படத்திற்கு ப்பளிசிட்டிக்கு, பப்ளிசிட்டியும் ஆச்சு; மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கும் என கருதிய படக்குழு, சமீபத்தில் நடந்த பிளஸ்டூ மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றுள்ள மாணவ - மாணவிகள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ் (பாலாஜி ரியல் மீடியா) அறிவித்துள்ளார்.

மாநில அளவில் ப்ளஸ் டூவில் முதலிடம் பெற்ற ரேகா மலர்விழிக்கு ரூ 1 லட்சம் ரொக்கம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நித்யா (ஸ்ரீவில்லிபுத்தூர்), ரம்யா (கோபிச்செட்டிப் பாளையம்), சங்கீதா (சேலம்), மின்னலாதேவி (செய்யார்), ஹரினி (பொன்னேரி) ஆகியோருக்கு தலா ரூ 20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

ஜூன் 15ம்தேதி நடக்கும் விழாவில் இந்த ரொக்கப் பரிசுகளை நடிகர் சிம்பு வழங்கவுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...