நயன்தாராவுக்கு விரித்த வலையில் விழுந்தார் மல்லிகா ஷெராவத்

சிம்பு நடித்து வரும் ஒஸ்தி படத்தில் இடம்பெறும் ஒரு குத்தாட்ட பாடலில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ஆடப்போகிறார். 


இந்தியில் வெளியான தபாங் படத்தினை தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் டைரக்டர் தரணி இயக்கி வருகிறார். 


நடிகர் சிம்பு நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஒரு குத்துப்பாட்டு இடம்பெறுகிறது. இந்தப் பாடலுக்கு நயன்தாராவை ஆட வைக்க எவ்வளவோ முயன்றனர் சிம்புவும், தரணியும். 


பெரும் தொகையை சம்பளமாகத் தருகிறோம் என்று கூறி வலை விரித்தும், அதில் விழ நயன்தாரா சம்மதிக்கவில்லை. இந்நிலையில் நயன்தாராவுக்கு விரித்த வலையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் விழுந்திருக்கிறார். 


இதுபற்றி சிம்பு தனது பேஸ்புக் பக்கத்தில், "ஒஸ்தி படத்தில் வரும் அந்த முக்கியமான பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட ஒப்புக் கொண்டுள்ளார். 


ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அந்தப் பாடலை எடுக்கிறோம். படம் தீபாவளி ரிலீஸ்..." என்று கூறியிருக்கிறார்.

1 comments:

மதுரை சரவணன் said...

nallathu thaanee... mallika kuththu thamilil varattume...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...