எஸ்.பி.பி.சரணை மன்னித்துவிட்டாராம் சோனா

கடிதம் மூலம் எஸ்.பி.பி. சரண் வருத்தம் தெரிவித்ததால் அவரை மன்னித்து விட்டு, சமரசம் செய்து கொண்டதாக நடிகை சோனா அறிவித்துள்ளார்.

நடிகர் வைபவ் வீட்டில் நடந்த மங்காத்தா மிட்நைட் மது விருந்தில் பங்கேற்ற தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது நடிகை சோனா பரபரப்பு புகார் அளித்தார்.

எஸ்.பி.பி.சரண் 10 நாட்களுக்குள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் என் சாவுக்கு அவர் தான் காரணமாக இருப்பார் என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சோனாவின் புகார் மீது போலீசார் வழங்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், எஸ்.பி.பி. சரண், தன்னை கைது செய்ய இடைக்கால தடையாணை பெற்றார். அதோடு என் மீது சோனா அபாண்டமாக புகார் கூறுகிறார்.

நான் அவரிடம் பாலியல் முறையில் தவறாக நடக்கவில்லை. அவர் தான் செக்ஸ் உணர்வை தூண்டும் வகையில் என்னிடம் நடந்து கொண்டார், என்று எஸ்.பி.பி.சரண் கூறினார்.

இதனால் கோபமடைந்த சோனா, சரண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாக கூறி அவற்றை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதனால் வழக்கு சூடு பிடித்தது. இதுஒருபுறமென்றால், பெண்கள் அமைப்பு சோனாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்க ஆயத்தமானது. இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், ஆண்கள் சங்கமும் சரணுக்கு ஆதரவாக களமிறங்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் சோனா - எஸ்.பி.பி.சரண் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது. எஸ்.பி.பி.சரண் வருத்தம் தெரிவித்து கடிதம் மூலம் என்னிடம் மன்னிப்பு கேட்டதால் நான் அவருடன் சமரசம் செய்து கொண்டேன், என்று சோனா அதிரடியாக அறிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...