நடிகரின் தந்தையிடம் தங்க சங்கிலியை பறித்த கொள்ளையன்

சென்னையில் நடிகர் கரணின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், அவரது தந்தையிடம் கத்திமுனையில் தங்க சங்கிலியை பறித்துச் சென்றான்.

நடிகர் கரணின் தந்தை கேசவன். 80 வயதாகும் இவரும் சில படங்களில் நடித்துள்ளார். இவர், சென்னை கோயம்பேடு வடக்குமாட வீதியில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் கேசவன் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டு கதவு தட்டப்பட்டது. கேசவன் கதவை திறந்தார். வெளியில் நின்ற மர்ம நபர் ஒருவன், கேசவனை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான்.

பின்னர் கத்திமுனையில் கேசவனை மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டான்.

இந்த சம்பவம் தொடர்பாக கேசவன் கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...