சம்பளம் கொடுக்காததால் விழாவை புறக்கணித்த நடிகை

சினிமாவில் நடித்ததற்கான சம்பளத்தை கொடுக்காததால் பாடல் வெளியீட்டு விழாவை மை பட ஹீரோயின் புறக்கணித்து விட்டார்.

ஆந்திராவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தற்போது அங்கும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா பாசன்.

கொஞ்சம் அழகாக இருந்தால் போதும். அதுவும் கொழுக் மொழுக் என்று இருந்தால் தமிழ் சினிமாக்காரர்கள் விட்டு வைப்பார்களா? ரா ரா, மை ஆகிய இரு படங்களிலும் இவர்தான் ஹீரோயின்.

மை படத்தின் சூட்டிங்கில் எந்தவித தொந்தரவும் கொடுக்காமல் தேதிகளை அள்ளிக் கொடுத்து நடித்து முடித்திருக்கும் ஸ்வேதா பாடல் வெளியீட்டு விழா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.

ஏனாம்? படத்தின் ஹீரோயினான ஸ்வேதா வந்தால்தான் விழா களைகட்டும் என நினைத்த தயாரிப்பாளர் தரப்பு, அம்மணியை விழாவுக்கு அழைக்க, அம்மணியோ.... முதலில் சம்பள பாக்கியை கொடுங்க. அப்புறம் வர்றேன் என்றாராம்.

விழா நடக்கும் நிமிடம் வரைக்கும் சம்பளம் போய் சேராததால் சென்னையிலேயே இருந்தும், அறையை விட்டு வெளியே வரவில்லையாம் ஸ்வேதா.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...