ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தையா...?

பிரபல ஜோசியர் ஒருவர் ஏற்கனவே ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை குழந்தை தான் பிறக்கும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டை குழந்தை தான் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் முன்னணி நாயகியுமான ஐஸ்வர்யா ராய்க்கும், நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ம் ‌ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் நடந்து நீண்ட நாட்களாகியும் இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார். இதனிடையே ஐஸ்வர்யாவுக்கு நிச்சயம் பெண் அல்லது இரட்டை குழந்தை பிறக்கும் என்று ஜோதிடர் ஒருவர் கூறியிருந்தார்.

அவர்கூறியது, இப்போது நிஜமாகிவிடும் போல் இருக்கிறது. தற்போது ஐஸ்வர்யாவுக்கு இரட்டைக் குழந்தைகள் என்று மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதனால் அமிதாப் குடும்பம் படுகுஷியாகியுள்ளது.

ஏற்கனவே மணிரத்னத்தின் குரு படத்தில் நடித்த ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதியருக்கு, இரட்டை குழந்தை பிறப்பது போன்ற காட்சியை படமாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...