மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் அப்புக்குட்டி

வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் அப்புக்குட்டி, அழகர் சாமியின் குதிரை படம் மூலம் ஹீரோவானார்.

ஹீரோவுக்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் கதாநாயகனாக நடித்த அப்புக்குட்டியை பலரும் பாராட்டினார்கள்.

அதேபோல படமும் முதலுக்கு மோசமில்லாமல் ஓடியது.

இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அப்படத்தின் பெயர் மன்னாரு.

தேசிய விருது பெற்ற தம்பி ராமையா, இந்த படத்தின் வசனம் - பாடல்களை எழுதி, முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

இவரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஜெய்சங்கர் என்பவர்தான் படத்தை இயக்குகிறார். தமிழ் பிக்சர்ஸ் சார்பில் படம் தயாராகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...