எஸ்.பி.பி.சரண் மன்னிப்பு கேட்க வேண்டும் - சோனா

பலாத்காரம் செய்ய முயன்றதாக எஸ்.பி.பி.சரண் மீது குற்றம் சாட்டியிருக்கும் நடிகை சோனா, சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவேன், இல்லாவிட்டால் வழக்கு தொடரும் என்று உறுதியாக கூறியுள்ளார்.

மங்காத்தா படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் வைபவ் தனது வீட்டில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விருந்தில் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இதில் நடிகை சோனாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பி.சரணும் கலந்து கொண்டனர். இந்நிலையில் விருந்தில் எஸ்.பி.பி.சரண், தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக சென்னை பாண்டிபஜார் போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசாரும் சரண் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதனிடையே சோனாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த விவகாரத்தில் கடந்த இரு தினங்களாக நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் இடையே சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.

வழக்கை வாபஸ் பெறும்படி சோனாவிடம் நேரில் போய் கேட்டுக் கொண்டார் சரணின் தந்தை எஸ்பி பாலசுப்ரமணியன். சரணின் நண்பர்களும் சோனாவிடம் இதுகுறித்து வலியுறுத்தி வந்த நிலையில் எஸ்.பி.பி.சரண் முன்ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அந்தமனுவில், சோனா பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டார். சினிமாவில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டு பணக்கஷ்டத்தில் உள்ளார். கடனும் இருக்கிறது. என் குடும்ப பின்னணியை மனதில் வைத்து என்னை கவர்ச்சியால் மயக்கி பணம் பறித்து கடன் பிரச்சினையை தீர்க்க திட்டமிட்டார். அவரை நான் எச்சரித்ததால் என் மேல் பொய் புகார் அளித்துள்ளார். என்றெல்லாம் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

சரணின் இந்த புகார் சோனாவை ஆத்திரமடைய செய்துள்ளது. இது குறித்து சோனா கூறுகையில், மது விருந்தில் பலர் முன்னிலையில் எஸ்.பி.பி.சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்த எல்லோருக்குமே அது தெரியும். அவர்கள் சாட்சிகள் என்பதால் நடந்த உண்மைகளை வெளியிட வேண்டும்.

சரணுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தால் அவர்கள் மீதும் வழக்கு தொடருவேன். எஸ்.பி.பி.சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நான் போய் சரணை பாலியல் தொந்தரவு செய்வேனா... இதை யாராவது நம்புகிறீர்களா...

சரண் பகிரங்க மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். மன்னிப்பு கேட்காமல் எந்த சமரசத்துக்கும் நான் தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...