ராவணன் மனைவியாக நடிக்க நயன்தாரா மறுப்பு

ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் நடிக்க நடிகை நயன்தாரா மறுத்து விட்டாராம். நயன்தாரா ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார்.

நடிகர் பிரபுதேவா, அவரது காதல் மனைவியை பிரிவதற்கு காரணமாக இருந்த நயன்தாரா சீதை வேடத்தில் நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அந்த படத்திற்கு பிறகு புதுப்படங்களில் நயன்தாரா ஒப்பந்தமாகவில்லை.

சினிமாவுக்கு முழுக்குப்போட்டு விட்டதாகவும், விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தப் போவதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் பாலிவுட் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, தனது படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் ராவணன் கதையை கருவாக வைத்து ராவணன் என்ற பெயரில் புதிய படமொன்று இயக்கவுள்ளார்.

இதில் ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. ஆனால் நயன்தாரா அந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...