சிம்புவின் மன்மதன்- 2 : நயன்தாரா காதல் கதையா?

தமிழ் சினிமா ஏற்கனவே மெகாஹிட் ஆன படங்களின் 2ம் பாகம் எடுப்பது புது பேஷன் ஆகி விட்டது. அந்த வகையில் சிம்பு நடித்த மன்மதன், மெகாஹிட் ஆனதுடன், அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயர் வாங்கி கொடுத்த படமாகும்.

தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மன்மதன்- 2 என்ற பெயரில் சிம்பு எடுக்கவுள்ளார். இதற்கான கதையை அவரே உருவாக்கி உள்ளாராம்.

தற்போது இந்த படம் நயன்தாராவின் காதல் கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே சிம்புவும் நயன்தாராவும் காதலித்து, பின்னர் பிரிந்து விட்டனர். அப்போது ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அறிக்கை விட்டனர்.

பின்னர் நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்தது. திருமணத்துக்கும் தயாரானார்கள். தற்போது அவர்களுக்குள்ளும் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.

இந்த கதையை தான் மன்மதன்-2 படத்தில் சிம்பு வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, இலியானா, தமன்னா உள்பட 6 கதாநாயகிகள் நடிக்க வைக்க சிம்பு முயற்சித்து வருகிறார் என்பது ஹைலைட் விஷயம் ஆகும்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...