நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றிய ரஜினி, கமல்

தமிழ் சினிமாவில் இன்று ஒரு சரித்திர நிகழ்வு. நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர்கள் ரஜினியும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் தோன்றி இன்ப அதிர்ச்சி கொடுத்தனர். இந்த இன்ப அதிர்ச்சி நடந்தது கும்கி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தான்.

மைனா படத்திற்கு பிறகு பிரபு‌சாலமன் இயக்கி இருக்கும் படம் கும்கி. இப்படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் ஹீரோவாக நடிக்க, கேரளத்து வரவு லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் ஆடியோ சி.டி.யை கமல்ஹாசன் வெளியிட்டார்.

ஆடியோ வெயீட்டிற்கு பிறகு பேசிய கமல்ஹாசன், முதற்கண் என் அய்யனுக்கு வணக்கம். என்னை சிவாஜியின் ஒரு பிள்ளையாக பாவித்தற்கு நன்றி. நான் இங்கு வந்தது ஒரு கடமை. அவர் இறந்த பிறகும் பிரபு மற்றும் ராம்குமார் என்னை அவர்களது ‌சகோதரனாக பார்க்கிறார்கள்.

இங்கு சொன்னார்கள் விக்ரம் முதல் அடி நன்றாக வைத்திருக்கிறார் என்று, நான் சொல்கிறேன், முதல்அடியே அவர் அருவியில் வைத்திருக்கிறார்.அதில் அன்பு கொட்டுகிறது. மேலும் இந்த படத்தில் வெற்றியின் சாயல் தெரிகிறது. அதாவது மினிமம் கேரண்டி இந்த படம். இப்போதும் கர்ணன் வெற்றியை பார்த்தால் புரியும் அது மினிமன் கேரண்டி படம்.

இங்கு ரொம்ப முக்கியமானது ரஜினி வந்தது. ரொம்ப நியாமான ஆளு. இது எங்கள் வீட்டு விழா, எங்கள் இருவரது வீட்டின்‌ செங்கலில் சிவாஜி, பாலசந்தர், ஏ.வி.எம். பெயர் இருக்கிறது. வாழ்க்கையில் எங்களுக்கு அவர்கள் கிடைத்த பாக்கியம்.

நான் சிவாஜிக்கு சவால் விட்ட படம் தான் தேவர் மகன். இந்த விழாவில் கலந்து கொண்டது தலை குனிந்து, முகம் சுளித்து கலந்து கொண்டதற்காக அல்ல, மனசு நிறைய வாழ்த்த வந்திருக்கோம். விக்ரமுக்கு ‌நிறைய பொறுப்பு இருக்கு. எப்போதும் பயம் கூடாது. தினம் கற்று கொண்டே இரு. நாங்கள் அப்படித்தான் கற்று கொண்டோம்.

நாங்கள் சிவாஜியிடம் கற்று கொண்டது நிறைய. மேலும் ஒன்று சொல்கிறேன். கலைஞர் எழுதிய வசனம், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நம்பி தடுமாற வேண்டாம். உன் பகுத்தறிவை கொண்டு செயல்படு என்று சொல்லி வாழ்த்துகிறேன். மேலும் இந்த படத்தில் உழைத்த அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

ரஜினி பேசும்‌போது, எல்லோருக்கும் வணக்கம். நான் படவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. சினிமாவில் எல்லோரும் எனக்கு நண்பர்கள். ஒரு நிகழ்ச்சிக்கு போய்விட்டு இன்னொரு நிகழ்ச்சிக்கு செல்லாவிட்டால் வருத்தப்படுவார்கள்.

டாக்டர்களும் விழாக்களில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். என்னிடம் ஒரு குறை உள்ளது. எது என்ன வென்றால், ஒரு விஷயத்தில் கமிட் ஆனா அது அப்படியே மைண்ட்டில் ஓடிட்டு இருக்கும். அதைவிட்டு வெளியில் வரமுடியாது. ரசிர்களாகிய உங்களால் தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன். மீண்டும் உயிர் பிழைத்து வந்திருக்கேன்.

உங்களை பார்க்க ‌வெட்கமா இருக்கு. கடன் வாங்கிட்டு, கடன் கொடுத்தவன் வந்தா வேறு பக்கம் போற மாதிரி இருக்கு. உங்களுக்கு எல்லாம் நான் என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை. மூளை வேலை செய்தாலும், உடம்பு ஒத்துழைக்கணும். நான் சிங்கப்பூரில் மருத்துவமனையில் இருந்தபோது கமல் என்னை பார்க்க விரும்பினார், முடியவில்லை.

நான் இந்தியா வந்ததும் முதல் வேலையா அவருக்கு போன் செய்து நன்றி தெரிவித்தேன். ஒரு ஹாலிவுட் நிறுவனம் வந்து கமைல கூப்பிட்டு படம் பன்றாங்கன்னா, அவர் எவ்வளவு பெரிய நடிகர் என்று ‌எல்லோருக்கும் தெரியும். கமல் இந்த விழாவுக்கு வருவார் என்று தெரியும்.

ஆனால் பிரபு என்னிடம் வந்து இந்த விழாவில் பங்கேற்கும்படி சொன்னபோது, நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் எனக்கு விழா அழைப்பிதழை கொடுத்துவிட்டு போனார். எனக்கு ரொம்ப குழப்பமா இருந்துச்சு. பின்னர் காலை பிரபுவுக்கு போன் செய்து நான் விழாவுக்கு வருவதாக சொன்னேன்.

இந்த விழாவில் பங்கேற்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு. விக்ரமிற்கு எதிர்காலம் நல்லா இருக்கு. விக்ரம், எல்லாவற்றுக்கும் நீ பயப்படு, ஆனால் கவலைப்படாதே. பிரபு கவலைப்படுவார். என்னா தாத்தா பெயரை காப்பாற்றனுமே.

இந்த படத்திற்காக நீ ரொம்ப உழைத்து இருக்கிறாய். கடவுள் இருக்கார், உன் தாத்தா இருக்கார், கண்டிப்பா நீ நல்லா வருவ. இங்கிருக்கும் இளைஞர்கள் எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லி கொள்கிறேன். வருடத்திற்கு ஒரு படம் பண்ணாதீங்க. குறைந்தது 3 படமாவது கையில் வைத்திருங்க.

ஏன்னா ஒரு படம் சரியாக போகவில்லை என்றால் ரொம்ப கஷ்மா இருக்கும், அதனால் 3 படம் கையில் இருந்தால் ரொம்ப நல்லது. இந்தபடத்தில் உழைத்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

முன்னதாக நடிகர் பிரபுவுக்கு முன்னாள் மற்றும் இன்னாள் முதல்வர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...