மீண்டும் செல்வராகவன்-யுவன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் பிரிந்த செல்வராகவன்-யுவன் சங்கர் ராஜா மீண்டும் இணைய உள்ளனர்.செல்வராகவனின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் பெரும்பாலான படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இவர்களது கூட்டனியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது. கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் முதலில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது.

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்தனர். இதனையடுத்து யுவனுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இசையமைத்தார்.

தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகி வரும் மறவன் (மாலை நேரத்து மயக்கம்) படத்திலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் யுவனும்-செல்வராகவனும் மீண்டும் இணையவுள்ளனர். தனுஷ் நடிப்பில், செல்வராகவன் விரைவில் இயக்கவுள்ள இரண்டாம் உலகம் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதனை யுவன் சங்கர் ராஜாவும் உறுதிபடுத்தியுள்ளார். மீண்டும் நாங்கள் இருவரும் இணைவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று யுவன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...