நடுநிசி நாய்கள் நவீன கால படம்

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் படம் பலதரப்பட்ட விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது.


வளர்ப்புத் தாயையே தாரமாக்கிக் கொள்ளும் சர்ச்சையான கதையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படம் குறித்து, படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-


நடுநிசி நாய்கள் ஒரு நவீன கால தமிழ்ப்படம். இந்த திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் சினிமாவின் அறிவிக்கப்படாத விதிகளை உடைக்க முயற்சி செய்திருக்கிறேன். இது எனக்கும்கூட ஒரு புது வகையான திரைப்படம்தான்.


இருண்ட உண்மைகளும் மனதை பாதிக்கும் விஷயங்களும் கொண்ட படம் என்ற முறையில் இது ஒரு பரிசோதனை. எல்லா வகையிலும் என்னுடைய முந்தைய படங்களிலிருந்து நடுநிசி நாய்கள் வேறுபட்டது. நான் என்னுடையது என்று அறியப்பட்ட பாணியிலிருந்து விலகி மாற்று பாணிகளை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கிறேன்.


புதிய பாணிகளை எனதாக்கி கொள்ள முயன்று கொண்டே இருக்கிறேன் என்பதன் வெளிப்பாடுதான் இத்திரைப்படம். எந்த ஒரு பரிசோதனை முயற்சிக்கும் போற்றுதலும், தூற்றுதலும் இருக்கும் என்பது இன்று தமிழ் சினிமாவில் நான் இருக்கும் இடத்தில் நான் நன்கு அறிந்ததே.


முழு மனதிண்மையோடு நான் நடுநிசி நாய்களின் பக்கம் நிற்கிறேன். இந்த வகைப்படங்கள் பார்த்து பழகாதவர்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கூற முடியாத ஒரு படம்தான் இது. இது ஒரு அனுபவம், அவ்வளவே.


இறுதியில் என்னுடைய இயக்குநர் கார்டு வரும் முன்பு வரும் இறுதிகாட்சி உங்களுக்கு விளக்கும் இத்திரைப்படத்தை எடுக்க நான் ஏன் முடிவு செய்தேன் என்று. உங்களுடைய ஆதரவு தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாணியும் பல புதிய தலைமுறை இயக்குநர்களையும் தோற்றுவிக்க வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 comments:

சுதர்ஷன் said...

எம்மவர்களுக்கு எது தான் புரிந்திருக்கிறது .. !
நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...