விஜய்யின் தேர்தல் நேர ட்ரிப்! புது தகவல்

தேர்தல் நெருங்கி விட்டாலே முன்னணி நடிகர்களின் பாடு ரொம்பவே திண்டாட்டமாகத்தான் இருக்கும். எந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பார், எந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார்? என யூகங்களின் அடிப்படையில் மீடிக்களில் ‌பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கும்.

சாதாரண நடிகரின் நிலையே இப்படியென்றால், அரசியலுக்கு விரைவில் வருவேன் என்று அவ்வப்போது சொல்லி தனது ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் நிலை எப்படியிருக்கும்?


காவலன் படத்தை ரீலிஸ் செய்ய விடாமல் அரசியல்வாதிகள் தடுத்தார்கள்; ஆளும்கட்சி பிரமுகர்கள் தியேட்டர் அதிபர்களை மிரட்டினார்கள் என்றெல்லாம் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய விஜய், காவலன் ஹிட் ஆகி விட்ட மகிழ்ச்சியை சைலண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்.


விஜய்யின் அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரோ, காவலன் பஞ்சாயத்து நடந்தபோது ஒருமுறை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். இப்போது மீண்டும் ஒருமுறை போயஸ் கார்டன் சென்றிருக்கிறார்.


இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது, தேர்தல் நேரத்தில் விஜய், அதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் களம் இறங்குவார் என்று பலரும் யூகித்துக் கொண்டிருக்கின்றனர்.


ஆனால் விஜய்யின் எண்ணம் வேறாக இருக்கிறது என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டார தகவல். தேர்தல் நேரத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவாக விஜய் பிரசாரம் செய்யப்போவதில்லையாம். ‌அந்த நேரத்தில் வெளிநாடு ட்ரிப் அடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம் அவர்.


அரசியல் விவகாரத்தில் விஜய்யின் எண்ணமும், அப்பா சந்திரசேகரின் எண்ணமும் வேறு‌ வேறாக இருப்பதாக சொல்கிறது விவரமறிந்த வட்டாரம்!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...