மீனாட்சியை இழிவுபடுத்திய கவுத‌ம் வாசுதேவ் மேனன்

நடுநிசி நாய்கள் படத்தில் தமிழ் கடவுளான மீனாட்சியை இழிவு படுத்திய டைரக்டர் கவுத‌ம் வாசுதேவ் மேனனுக்கு ஒரு வாரம் கெடு விதித்திருக்கிறது சிவசேனா கட்சி.


வளர்ப்பு தாயையே தாரமாக்கிக் கொள்ளும் கலாச்சார சீரழிவு கதைதான் நடுநிசி நாய்கள் படத்தின் கதை. இந்த படம் ரீலிஸ் ஆன நாள் முதலே பல்வேறு எதிர்ப்புகளை சம்பாதி்த்து வருகிறது.


அதே நேரம் போட்ட பணத்தை படம் ரீலீஸ் ஆகி இரண்டொரு நாளிலேயே எடுத்து விட்டார்கள் தயாரிப்பாளர்கள்.


விளக்குமாற்றுடன் கவுதம் வீடு முற்றுகை, நாய்களுடன் கவுதம் வீடுமுன் போராட்டம் என நடந்து வந்த இந்த போராட்டம், இப்போது கெடுவில் போய் நிற்கிறது.


நடுநிசி நாய்கள் படத்தில் இடம்பெறும் மீனாட்சி என்ற பெயரை ஒரு வாரத்திற்குள் நீக்காவிட்டால் கவுதம் மேனன் வீடு முன் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது சிவசேனா கட்சி.


இதுபற்றி கட்சியின் தமிழ்மாநில தலைவர் மா.திரவிய பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுநிசி நாய்கள் திரைப்படம் தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது.


படத்தில் வரும் மீனாட்சி என்ற பெண்ணின் பெயரை மேரி என்றோ பாத்திமா என்றோ பெயர் வைக்க வேண்டியதுதானே?


ஏன் தமிழ் கடவுளான மீனாட்சியை இழிவு படுத்த வேண்டும்?. மீனாட்சி என்ற பெயரை படத்திலிருந்து ஒரு வாரத்திற்குள் நீக்காவிட்டால் சிவசேனா கட்சி கவுதம்‌ மேனன் வீட்டை முற்றுகையிட்டு, மறியல் போராட்டம் நடத்தப்படும், என்று கூறியுள்ளார்.

1 comments:

உலக சினிமா ரசிகன் said...

http://worldcinemafan.blogspot.com/2011/02/blog-post.html
போலியான இப்படத்தின் முகத்திரையை நானும் கிழித்திருக்கிறேன்.வந்து பாருங்கள்.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...