சினிமாவை விட்டு விலகுகிறார் சினேகா

நயன்தாராவை போல் சினிமாவை விட்டு விலக நடிகை சினேகாவும் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா கடைசியாக ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்ற பக்தி படத்தில் சீதை வேடத்தில் நடித்தார்.

அப்படத்துக்கு பின் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. அதுபோல் சினேகாவும் திருமணத்துக்கு தயாராகிறார். நடிகர் பிரசன்னாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது.

அவர்கள் திருமணத்துக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் நயன்தாராவைபோல் கடைசியாக ஒரு பக்தி படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு ஒதுங்க சினேகா திட்டமிட்டிருப்பதாக தெலுங்கு திரையுலகில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி தெலுங்கில் தயாராகும் ராஜன்னா என்ற புராண படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நாயகனாக நாகார்ஜுனா நடிக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

சினேகா தலையில் புனித கலசம் சுமந்து கடவுளை வழிபட பக்தி பரவசத்துடன் நடந்து செல்வது போன்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

சினேகா இந்த படத்தை விரும்பி தேர்ந்தெடுத்து நடிப்பது திரையுலகை விட்டு விலகுவதற்காகத்தான் என்று கூறுகிறார்கள் தெலுங்கு ரசிகர்கள்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில் :
"நீங்க மரமாக போறீங்க..."

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...