7 ஆண்டுக்கு பிறகு புதிய படம் இயக்குகிறார் பாலுமகேந்திரா

டைரக்டர் பாலு மகேந்திரா சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார். தலைமுறைகள் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பாலு மகேந்திராவின் ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் சசிகுமார் நடிக்கிறார். அவரைத் தவிர பெரும்பாலான பாத்திரங்களுக்கு புதுமுகங்களைத் தேர்வு செய்துள்ளாராம் பாலு மகேந்திரா.

இவரது இயக்கத்தில் கடைசியாக வந்த படம் அது ஒரு கனாகாலம். தனுஷ் நடித்திருந்தார். 2005ல் இந்தப் படம் வந்தது. அதற்குப் பிறகு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக படங்கள் இயக்கவில்லை.

புதிய படம் குறித்து பாலுமகேந்திரா தனது ப்ளாக்கில். மூடுபனியில் தொடங்கி அது ஒரு கனாக்காலம் வரை எனது எல்லாப் படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைப்பாளர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சசிகுமார் தயாரிப்பில் இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் தலைமுறைகள் என்று (தற்காலிகமாக) பெயரிடப்பட்டிருக்கும் எனது 22வது படத்திற்கும் இளையராஜாதான் இசை.

இதை நான் இன்னும் ராஜாவிடம் சொல்லவில்லை. படத்தை முடித்து அவருக்குப் போட்டுக் காண்பித்தபின் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

78ல் தொடங்கிய எங்கள் உறவு இன்று வரை தொடர்கிறது. 34 இனிய வருடங்கள். இனியும் அப்படித்தான், என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...