சிம்புவைப்பற்றி தவறான கருத்து

சிம்பு என்றாலே டைரக்டர்களின் வேலைகளில் தலையிடுபவர், அவர்கள் சொன்னபடி நடிக்காமல் தனது விருப்பத்துக்கு நடிப்பவர் என்ற கருத்து கோலிவுட்டில் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கி வரும் டைரக்டர் விஜய்சந்தரிடம் கேட்டபோது, அந்த கருத்தை மறுக்கிறார்.

சிம்பு பற்றி அவர் கூறியதாவது, சிம்பு ஒரு நல்ல நடிகர். மனதில் பட்டதை ஓப்பனாக பேசக்கூடியவர்.

அதோடு, தான் நடிக்கும் படம் நன்றாக வரவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். இதைதான் மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு அவரை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்.

என்னைக்கேட்டால், அவர் ஒரு சிறந்த நடிகர். அவரைப்பற்றி தவறான பரவியுள்ள செய்தி என்பது, வானொலியில் கதை சொல்வது போல்தான். அது ஒரு கற்பனை. அதை ஒருவர் சொல்லச்சொல்ல நாம் கேட்கும்போது மனத்திரையில் ஒரு காட்சி ஓடிக்கொண்டேயிருக்கும்.

சிம்புவைப்பற்றி சித்தரிக்கப்பட்டிருப்பதும் அப்படியொரு கதைதான். அந்த கதையை யாரும் நம்ப வேண்டாம் என்பதே எனது கருத்து என்கிறார்.

அதோடு, வாலு படத்தைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க எனது கதை திரைக்கதைதான். அதில் அவராக எந்த குறுக்கீடும் செய்யவில்லை. நாம் சொன்னபடி நடித்துக்கொடுக்கிறார்.

திருப்தி இல்லை என்றால் இன்னொரு டேக் எடுத்து நடிக்கவும் தயாராகி விடுகிறார். அதிலும் மற்ற படங்களை விட இந்த படத்தில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கிறார் சிம்பு என்கிறார் விஜயசந்தர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...