எமிஜாக்சனுக்கு மீண்டும் தடைபோட்ட டைரக்டர் ஷங்கர்




மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்தவர் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். இவர் விக்ரம் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

முந்தைய படங்களை விட மெகா படம் என்பதோடு, இந்த படத்தில் நடிப்பதற்கு எமிக்கான சம்பளமும் பல கோடிகளாக உயர்த்தப்பட்டுள்ளதாம். 

அதனால் கோலிவுட்டிலேயே ஹாலிவுட் ரேஞ்சுக்கு சம்பளம் வாங்கும் நடிகையாகியிருக்கிறார் எமி. இதையடுத்து அவரது நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் அடிக்கடி மிட்நைட் பார்ட்டிகளில் கலந்து கொண்ட எமி, நள்ளிரவு வரை குடியும் குடித்தனமுமாக இருந்து விட்டு காலை படப்பிடிப்பு என்றால் மதியம்தான் ஸ்பாட்டில் தலைகாட்டினார். 

இதனால் படப்பிடிப்பு இருக்கும் நாட்களில் பார்ட்டிகளில் கலந்து கொள்வதற்கு அவருக்கு தடை போட்டார் டைரக்டர் ஷங்கர். அதையடுத்து நல்ல பிள்ளையாட்டம் அடக்கிவாசித்தார் எமி.

ஆனால் இப்போது, அவரை சந்திக்க அடிக்கடி சில ஹாலிவுட் நடிகர்கள் ஸ்பாட்டுக்கு வருகிறார்களாம். அப்படி வருபவர்கள், கேரவனுக்குள்ளேயே பாரை திறக்கிறார்களாம். 

ஏற்கனவே ஆல்ஹகாலில் முங்கு நீச்சல் நடிக்கக்கூடியவர் எமி எனபதால், தனது சுயகட்டுப்பாட்டையும் மீறி சரக்கு அடிக்கத் தொடங்கி விடுகிறாராம். அப்படி அடித்து விட்டு, ஸ்பாட்டுக்கு வந்து நடிக்கிறாராம். 

ஆனால் இதை அவருடன் நெருக்கமாக நடிப்பவர்கள் கண்டுபிடித்து முகம் சுழிக்கிறார்களாம். இதையும் கண்டுபிடித்து விட்ட ஷங்கர், உடனடியாக எமிஜாக்சனின் ஹாலிவுட் நண்பர்களை அங்கிருந்து விரட்டியடித்து விட்டாராம். 

அதோடு, படப்பிடிப்பு இல்லாத நாட்களில் யூனிட் சார்பில் பார்ட்டி வைக்கிறோம். அதனால் படப்பிடிப்பு நாட்களில் மட்டுமே ஆல்ஹகால் எடுத்துக்கெர்ளள வேண்டாம் என்று எமிக்கு மீண்டும் தடை போடப்பட்டுள்ளதாம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...