அடுத்த ஆண்டு சித்தார்த்-சமந்தா திருமணம்


தெலுங்கு சினிமாவில் சித்தார்த்-சமந்தா ஜோடியைப்பற்றி காதல் செய்தி வெளிவராத நாளே இல்லை என்கிற அளவுக்கு அவர்களின் காதல் செய்தி காட்டுத்தீயாய் பரவிக்கிடக்கிறது. 

ஆரம்பத்தில் காதலை மூடி மறைத்து வந்த அவர்கள், சமீபகாலமாக வெளியிடங்களுக்கு ஜோடியாக வரத் தொடங்கியுள்ளனர். 

சமீபத்தில்கூட காளஹஸ்தி கோயிலில் ராகு கேது பரிகார பூஜை செய்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியானபிறகு அவர்களின் காதல் செய்தி இன்னும் உறுதியானது.

இதையடுத்து அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்களால் மறுப்பு சொல்ல முடியவில்லை. 

ஆனால், சமந்தா அளித்த பதிலில், சித்தார்த்தான் அவரது வருங்கால கணவர் என்பது தெரியவந்திருக்கிறது. 

ஆனால், எங்கள் திருமணம் இப்போதைக்கு இல்லை என்று கூறிய சமந்தா, தற்போது என் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. 

அதனால் இந்த படங்களை முடித்தபிறகுதான் திருமணம் பற்றி முடிவு செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். 

ஆக, அடுத்த ஆண்டில் சித்தார்த்-சமந்தா திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

1 comments:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

உங்களூக்கு பொறாமை

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...