சின்ன தீவுக்கு சொந்தக்காரியான நயன்தாரா

நடிகை நயன்தாரா கொச்சி அருகே சின்ன தீவு ஒன்றை வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் என்பது அனைவரும் தெரிந்ததே.

அவர்கள் திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளனர். அதற்காக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார் நயன்.

எப்பொழுது ஷாப்பிங் சென்றாலும் தனக்கு டிரெஸ் எடுக்கிறாரோ இல்லையோ, தவறாமல் பிரபுதேவாவுக்கு டிரஸ் எடுத்துவிடுவார்.

இந்நிலையில் கொச்சியில் இயற்கை எழில் கொஞ்சும் சின்ன தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம் நயன்தாரா.

இது தவிர திருவல்லா, எர்ணாகுளம், தேவரா ஆகிய இடங்களிலும் வீடு வாங்கியிருப்பதாக கேரள பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...