சின்னத்திரையில் ஜேம்ஸ்பாண்ட்டாக காமெடியன் செந்தில்

வசந்த் டிவியில் ஞாயிறுதோறும் பிற்பகல் இரண்டரை மணிக்கு ஒளிபரப்பாகும் துப்பறியும் தொடர் ஜேம்ஸ்பாண்ட்-007. நடிகர் செந்தில் இந்த தொடரில் துப்பறியும் ஜேம்ஸ்பாண்டாக வந்து கலகலப்பூட்டுகிறார்.

சினிமாவில் கவுண்டமணி - செந்தில் நகைச்சுவை கூட்டணியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.

இந்த கூட்டணியில் கவுண்டமணி நடிக்க ஆர்வம் காட்டாததால், செந்தில் மட்டும் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

சின்னத்திரையில் முதன்முதலாக அவர் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் கலக்கப்போகிறார். வசந்த் டிவியில் அவருக்காக அமைந்த களமே இந்த ஜேம்ஸ்பாண்ட் தொடர்.

தொடரில் செந்தில் 15 வித கெட்டப்புகளில் தன்னை உருமாற்றிக்கொண்டு அதுவரை கண்டுபிடிக்க முடியாத சில கேஸ்களில் துப்பறிகிறார்.

இந்த கெட்டப்பில் நரிக்குறவர், கிளி ஜோசியக்காரர் போன்ற கேரக்டர்களும் அடங்கும் என்று தொடரை இயக்கும் டைரக்டர் ஜெயமணி கூறியுள்ளார்

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...