12 வருடம் சினிமாவை மறந்த அரவிந்த்சாமி


12 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கும் கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் அரவிந்த்சாமி. இத்தனை வருட இடைவெளியில் சினிமாவை மறந்து இருந்தது ஏன் என்பதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறியிருப்பதாவது: 20 வயசுல தளபதி படத்துல மணிரத்னம் சார் நடிக்க வச்சார். அப்போ எனக்கு நடிப்புன்னா என்னென்னே தெரியாது. 

அவர் சொல்றபடி செஞ்சேன். அது எனக்கு பெரிய பெயரை கொடுத்துச்சு. முதல் படமே தமிழக சூப்பர் ஸ்டாருடனும், மலையாள சூப்பர் ஸ்டாருடனும் நடிக்க வாய்ப்பு. அவர்களோடு என்னையும் மக்கள் ரசித்தார்கள். 

அடுத்து ரோஜாவில் ஹீரோ. அடுத்து பம்பாயில் நடிச்சேன். எல்லாமே ஹிட். நம்பர் ஒண் இடத்தை நோக்கி நகர்ந்திட்டிருக்கிறப்போதான் அம்மா இறந்தாங்க. அம்மாமேல உயிரையே வச்சிருந்தேன். 

அவுங்களோட பிரிவு என்னை தனிமையாக்குச்சு. அப்புறம் ஒரு விபத்துல முதுகு எலும்பு உடைஞ்சு குனிந்து எழு முடியாத சூழ்நிலை. 

அதுலேருந்து மீண்டு வந்தால், அப்பாவோட பிசினஸ்களை நான் நடத்த வேண்டிய கட்டாயம். இப்படி அடுத்தடுத்து வந்த பிரச்சினைகள் என்னை சினிமாலேருந்து ஒதுக்கிடுச்சு. திரும்பி பார்த்தா 12 வருஷம் ஓடியிருக்கு. 

இடையில சில வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா நான் ஒத்துக்கல. பழைய அந்த சாக்லெட் ஹீரோவா நிக்க முடியாதுன்னு தெரிஞ்சுது. 

காரணம் காலம் என்னோட தோற்றத்தை மாத்தியிருந்துச்சு. ஆனா மணிரத்னம் சார் நீ இப்படி இருக்ககூடாது, வான்னு கடல்ல கொண்டு வந்து நிறுத்திட்டாரு. 

இனி தொடர்ந்து நடிப்பேன். நிறைய படம் நடிக்கணும்னு ஆசை கிடையாது. ஒன்றிரண்டு படங்கள்ல நடிச்சாலும் எனக்கு பொருத்தமான நல்ல படங்கள்ல நடிச்சா போதும் என்று நினைச்சிருக்கேன்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...