சர்ச்‌சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் சம்மதம்


விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கமல் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்மூலம் முஸ்லிம் தரப்பினருக்கும், விஸ்வரூபம் படத்திற்கும் எந்த பிரச்னையும் வராது என்று கமல் கூறியுள்ளார். 

கமலின் விஸ்வரூபம் படத்திற்கு முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இப்படத்தை தடை செய்தது தமிழக அரசு. 

ஆனால் இதனை எதிர்த்து கமல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராம் விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். 

இதனையடுத்து இப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழக அரசு தரப்பில் தடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மீண்டும் முஸ்லிம் அமைப்புகள் சிலருடன் செய்தியாளர்களை சந்தித்த கமல், படத்தில் விஸ்வரூபம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக சொல்கின்றனர். 

அதன்படி சில காட்சிகளை நீக்கும்படி எனது முஸ்லிம் சகோதரர்கள் கூறினார். இதனையடுத்து படத்தில் இருக்கும் சில காட்சிகளையும், வசனங்களையும் நீக்க முடிவு செய்துள்ளனர். 

இதன்மூலம் இனி முஸ்லிம் சகோதரர்களுக்கும், எனது விஸ்வரூபம் படத்திற்கும் எந்த பிரச்னையும் வராது. 

அதேசமயம் படத்திற்கு வேறு விதமான பிரச்னைகள் வந்து கொண்டு இருக்கிறது. இது எனக்கும், நாட்டுக்கும் பதற்றம் தரக்கூடியாக செய்தியாக இருக்கிறது.

எனக்கோ, எனது ரசிகர்களுக்கோ எதுவும் ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை என்றார். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...