கெளதம்மேனனை தடுமாற வைத்த நீதானே என் பொன்வசந்தம்


நடுநிசி நாய்கள் படம் ஏமாற்றியபோதுகூட பெரிய அளவில் பீல் பண்ணாத கெளதம்மேனன், இப்போது நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தோல்வியால் ரொம்ப தடுமாறிப்போயிருக்கிறார். 

இந்நிலையில், அடுத்தபடியாக யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்து சூர்யாவை நாயகனாக வைத்து துப்பறியும சந்துரு என்ற பெயரில் ஒரு படம் இயக்கயிருந்தார். 

ஆனால் விஜய் அந்த கதையில் நடிக்க மறுத்தபோது அடுதது தான் நடித்து தருவதாக வாக்களித்திருந்த சூர்யா, இப்போது அவருக்கு பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்கிறாராம். 

கைவசம் பல படங்கள் இருப்பதாக சொல்லி பட்டியல் போடுகிறாராம்.

இதனால் தன்னை சூழ்ந்திருக்கும் தோல்வி அலைகளை துரத்தியடிக்கும் நோக்கத்தில் அடுத்தபடியாக சில முன்வரிசை நடிகர்களை சந்தித்து கால்சீட் பேசி வருகிறார். 

ஆனால் ஒருகாலத்தில் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று பக்கம் பக்கமாக பேட்டி கொடுத்த நடிகர்கள்கூட இப்போது கனவு கலைந்து விட்டது என்று சொல்லி ஓட்டம் பிடிக்கிறார்களாம். 

இதனால் மனசொடிந்து போயிருக்கிறார் கெளதம். காலக்கொடுமையை நினைத்து கவலையுடன் இருப்பவர், அடுத்தபடியாக அஜீத்தை நாடியுள்ளார். 

சறுக்கி விழுந்த படாதிபதி, இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் பழக்கமுள்ள அஜீத், கெளதமுக்கு கைகொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...