கோடி கேட்கும் முருங்கைக்காய் இயக்குனர்

திருப்பதி பிரசாத படத்தின் கதை என்னுடையது என்று முருங்கைக்காய் இயக்குனர் கோர்ட் படியேற தயாரானார். 

இவரை எப்படி சமாளிப்பது என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது உதயமான அரசியல் வாரிசு நடிகர் படத்தை வாங்கிவிட்டார். 

அவர் முருங்கைக்காய் இயக்குனரை அழைத்து ஒரு கணிசமான தொகையை கொடுத்து "விஷயத்தை இதோடு விட்டுருங்க. டைட்டில்ல மூலக்கதைன்னு உங்க பேரை போட்டுர்றோம்" என்று சொல்லி சமாளித்தார். 

கடைசி நேரத்தில் அவசர அவசரமாக முருங்கைக்காய் இயக்குனர் பெயர் டைட்டிலில் சேர்க்கப்பட்டது. 

இப்போது படம் கோடிக் கணக்கில் வசூலை கொட்டிக் கொண்டிருப்பதை பார்த்தும்தான் தனக்கு கொடுத்த தொகை ரொம்ப சின்னது என்று ஃபீல் பண்ண ஆரம்பித்திருக்கிறாராம் முருங்கைக்காய் இயக்குனர். 

முழுசா ஒரு கோடி கொடுத்திருங்க என்று இப்போது கேட்க ஆரம்பிச்சிருக்காராம். 

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...