விஸ்வரூபம் படத்தின் மீதான வழக்கு ஒத்திவைப்பு


சென்னை: நடிகர் கமல் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைபடத்திற்கு விதிக்கப்பட்ட  தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட  வழக்கில் இன்று மாலை நடந்த விசாரணையில் வழக்கு வரும்  28 -ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டள்ளது.

நடிகர் கமல் தயாரித்துள்ள இப்படத்தை வெளியிட, 15 நாட்கள் தடை விதிக்குமாறு, அரசு தரப்பில் இருந்து, மாவட்ட கலெக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, மாவட்ட கலெக்டர்களும், இப்படத்திற்கு, 15 நாட்களுக்கு வெளியிட தடை விதித்துள்ளனர். 

தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில்  வழக்கு தொடர்ந்தார் கமல். இந்த வழக்கின் மீதான இன்று மாலை நடந்த விசாரணையில்  வரும் 28-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக  நீதிபதிகள் கே.என்.பாட்ஷசா ,பால்வசந்தகுமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்  திரைப்படத்தை நீதிபதிகளும், மனுதாரர்களும் வரும் 26-ம் தேதி  பார்த்த பின்னரே இந்த வழக்கின் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினர்.

சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு நடைபெறுவதை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் விஸ்வரூபம் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...