சமந்தாவின் அடாவடித்தனம்

சமந்தா பார்ப்பதற்கு அமைதியான பெண் போன்றுதான் தெரியும். ஆனால், அவரது தோழிகளுக்குத்தான் அவரது நிஜ கேரக்டர் என்னவென்று தெரியுமாம்.

இதுபற்றி சமந்தா கூறுகையில், நான் சாதாரணமாக என்னிடம் பழகுபவர்களிடம் ரொம்ப அமைதியாக அடக்க ஒடுக்கமான பெண்ணாகத்தான் தெரிவேன். 

ஆனால் எனக்குள் ஒரு அடாவடியான சமந்தாவும் இருக்கிறாள். அவள் எப்போதும் வெளிப்படுவதில்லை. என்னுடன் படிக்கும் சகதோழிகளை கண்டுவிட்டால் எகிறி குதித்து வெளியே வந்து விடுவாள். 

படிக்கிற காலங்களில் அந்த சமந்தா எப்போதும் வெளியேதான் இருந்தாள். அதனால், பல நாட்களில் கல்லூரியை கட் அடித்து விட்டு சினிமாவுக்கு சென்றிருக்கிறேன். 

வீட்டில் பெற்றோரை ஏமாற்றி விட்டு தோழிகளுடன் ஊர் சுற்றியிருக்கிறேன். என்னை அமைதியாக பார்த்து பழக்கப்பட்டவர்கள் அந்த சமந்தாவைப்பார்த்தால் ஆடிப்போவார்கள்.

அந்த அளவுக்கு அரட்டை, கூத்து கும்மாளம் என்று நான் இருக்கிற ஏரியாவே அமளிதுமளியாக இருக்கும் என்று தனது சுயரூபத்தை ஓப்பன் பண்ணி விடுகிறார் சமந்தா. 

இப்படி தன்னைப்பற்றி வெளிப்படையாக சொல்லும் சமந்தா, சினிமாவுக்கு வந்து ஒரு இடத்தை பிடித்த பிறகு தனது சுட்டித்தனத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டவர், பொறுப்பான பெண்ணாகவும் மாறி விட்டாராம்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...