வாய்ப்புக்காக பொய் சொல்கிறார் அசின்

வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கண்டபடி பொய் சொல்வதாக நடிகை அசின் மீது பிரபல சினிமா டைரக்டர் ரோஹித் ஷெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய படம் இயக்கப் போகிறார் ரோஹித் ஷெட்டி. இப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் ஹீரோவாக நடிக்கிறார்.

ஹீரோயினாக நடிக்கும் நடிகை பற்றி இன்னமும் முடிவு செய்யப்படாத நிலையில், நடிகை அசின், நான் தான் சென்னை எக்ஸ்பிரஸ் நாயகி என்றும், ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டது என்றும் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை படித்த டைரக்டர் ரோஹித் ரொம்பவே கடுப்பாகி விட்டாராம்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அசின் சொல்லியிருப்பது பொய். போல் பச்சனில் நடிப்பதால் அவர் சென்னை எக்ஸ்பிரஸிலும் ஹீரோயின் என்று சொல்லியிருப்பார் போலிருக்கிறது.

இப்போதைக்கு போல் பச்சான் முடித்தபிறகுதான், சென்னை எக்ஸ்பிரஸ் குறித்துப் பேசுவேன்.

அதுவரை அசின் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம். வாய்ப்புக்காக கண்டபடி பொய் பேசி வருகிறார் அசின், என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...