5 கதாநாயகிகளுடன் நிஜம் நிழலாகிறது

ஐந்து கதாநாயகிகளுடன் உருவாகும் புதிய படத்திற்கு நிஜம் நிழலாகிறது என்று பெயரிட்டுள்ளனர். ஒரு நகரில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. நிஜத்தில் நடைபெறும் அந்த கொலை சம்பவங்கள் அப்படியே ஒரு திரைப்படத்தில் காட்சிகளாக்கப்படுகின்றன.

இப்படி திகில் - மர்மம் கலந்து ஒரு படம் தயாராகும் இப்படத்தில் புளோரா, மும்பை அழகி மீனாட்சி, காஜல், சான்ட்ரா ஆகிய 4 பேருடன் இன்னொரு பிரபல கதாநாயகியும் நடிக்கிறார்.

தாநாயகனாக அறிமுகம் ஆகும் அருள்ராஜ், படத்துக்கு இசையும் அமைக்கிறார். சித்ரா லட்சுமணன், பஞ்சு சுப்பு, ஜெகன், சசிகுமார் ஆகிய 4 பேரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பூந்தோட்ட காவல்காரன், பாலைவன பறவைகள், தெய்வக்குழந்தை, போக்கிரி தம்பி, காவல் நிலையம் ஆகிய படங்களை டைரக்டு செய்த செந்தில்நாதன் இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார்.

அகத்தம்மா பிக்சர்ஸ் சார்பில் மலேசியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஏ.எம்.ஏ. தயாரிக்கிறார். இப்படத்தின் சூட்டிங் வரும் 26ம்தேதி ஊட்டியில் தொடங்குகிறது.

பாடல் காட்சிகளை தாய்லாந்தில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...