நடிகர் விஷாலுக்கு இந்த நிலையா?

சமரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஷாலுக்கு இந்த நிலையா என கோடம்பாக்கம் உச்சு கொட்டி பரிதாபப்படுகிறதாம். சமரன் படத்தில் விஷாலை நடிக்க வைக்க, பிரகாஷ்ராஜ் அப்படத்தில் நடிக்கிறார் என கூறி தான் ஒப்பந்தம் செய்திருக்கிறது படத்தின் தயாரிப்பு தரப்பு!

ஆரம்பத்தில் பிரகாஷ் ராஜ் பெரிய சம்பளம் கேட்கிறார் என தயாரிப்பு நிறுவனம் கூற, வேணும்னா எக்ஸ்ட்ரா வர்ற அந்த சம்பளத்தை என் சம்பளத்தில் குறைச்சுகோங்க என்று ரிடக்ஷனும் கொடுத்திருந்தார் விஷால்.

எல்லாம் பிரகாஷ்ராஜின் கால்ஷீட்டுக்காக. ஆனால் சொன்னபடி பிரகாஷ் ராஜை கமிட் செய்யப்படவில்லை .

விசாரித்ததில், சமரன் படத்தை ஆரம்பித்த சமயத்தில் தான் இதே தயாரிப்பு நிறுவனத்தின் மற்றொரு படம் மண்ணைக் கவ்வ, நஷ்டத்தில் தயாரிப்பு நிறுவனம் தவிக்க ஆரம்பித்தது என்பது தெரிய வந்தது.

அப்புறமென்ன? பிரகாஷ்ராஜ்தான். அவருக்கு கொடுக்கிற சம்பளத்தை வைத்துக் கொண்டு அரை படத்தை முடித்துவிடலாமே என்று கணக்கு போட்டவர்கள், ஜே.டி.சக்ரவர்த்தியை பிரகாஷுக்கு பதிலாக நடிக்க வைத்துவிட்டார்கள்.

சம்பளத்தையும் தியாகம் செய்து, பிரகாஷ்ராஜையும் இழந்த விஷால்தான் பாவம் என பரிதாபத்துக்கு ஆளாகியிருக்கிறார் அவர்!!

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...