டைரக்டரை அதிர வைத்த கிராம மக்கள்

டைரக்டர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்துடன் சூரி, கிருஷ்ணலீலை ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் ஸெல்வன் தற்போது மாயவரம் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

ஸெல்வனிடம் உதவி இயக்குனராக புணிபுரிந்த ராம்தேவ் இயக்கும் இப்படத்தின் சூட்டிங் பண்ருட்டி பகுதியில் நடந்து வருகிறது. படத்தில் இடம்பெறும் அண்ணன் அய்யனாரு மீசைகாரு... எனத்தொடங்கி தொடரும் ஒரு பாடல் காட்சியில் ஸெல்வன் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சூட்டிங்கை வேடிக்கை பார்க்க வந்த ஒரு பாட்டி, ஸெல்வனைப் பார்த்து உங்க படங்கள் எல்லாம் பார்திருக்கேன்; உன்னோட நடிப்பு எனக்கு பிடிக்கும், என்று கூறியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ந்து போன ஸெல்வன், தான் இதற்கு முன்பு எந்த படத்திலுமே நடிக்கவில்லையே என கூறியிருக்கிறார்.

அப்போது பக்கத்தில இருந்த ஒரு அம்மா, அந்த பாட்டி உங்களை நடிகர் ராஜ்கிரண்னு நெனைச்சுகிட்டு இருக்காங்க என்று கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த ஊரில் சூட்டிங் பார்க்க வந்த பலரும் ஸெல்வனை ராஜ்கிரன் என்றே நினைத்திருக்கிறார்கள்.

மாயவரம் படம் குறித்து டைரக்டர் ஸெல்வன் கூறுகையில், ராம் தேவ் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எனக்கு ஜோடியாக பூ, ஒன்பது ரூபா நோட்டு படங்களில் நடித்த இன்ப நிலா நடிக்கிறார். மற்ற அனைத்து கதா பாத்திரங்களும் மாயவரம் சீர்காழியில் உள்ள மக்கள் நடித்துள்ளனர்.

இது ஒரு சிறப்பு அம்சமாகும். ஒளிப்பதிவை ஆண்டனி கவனிக்க, ஸ்ரீ சாய் இசை, கலை தேவராஜ், மைனா முருகன் சண்டை பயிற்சிகளை மேற்கொள்ள, கே. பி. அஹமத் படதொகுப்பினை கவனிக்க, வயலார் ராஜேந்திரன், நடராஜன், ஜெகதீசன், திருவேற்காடு சங்கர் தயாரிக்கின்றனர்.

மாயவரம் திரைப்படத்தின் சூட்டிங், மாயவரம், சீர்காழி, திருமுல்லை வாசல், தொடுவா, நெய்த வாசல், ஆதமங்கலம், கொண்டால், பண்ருட்டி மற்றும் பூந்தமல்லி இடங்களில் நடைபெற்றது, என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...