ஷங்கரின் அடுத்த படத்தின் நாயகன் விக்ரம்

நண்பன் படத்தை தொடர்ந்து ஷங்கர் அடுத்து இயக்க இருக்கும் புதிய படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ஷங்கரின் கனவு படமான எந்திரன் படத்தை முடித்த பிறகு, இந்தியில் வெளியான 3-இடியட்ஸ் படத்தை அப்படியே ரீ-மேக் செய்தார் ஷங்கர்.

அந்தபடமும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து புதிய படத்திற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி இருக்கிறார் ஷங்கர்.

வழக்கமாக ஷங்கர் படங்களுக்கு சுஜாதா தான் வசனம் எழுதுவார். ஆனால் நண்பன் படத்தில் சுஜாதாவுக்கு பதில் பாடலாசிரியர் மதன் கார்க்கியை வசனம் எழுத வைத்தார் ஷங்கர்.

இந்நிலையில் இப்போது எழுத்தாளர் சுபாவை தன்னுடைய அடுத்த படத்தில் வசனம் எழுத வைக்கிறார்.

படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வரும் வேளையில் ஹீரோ குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இப்படத்தின் ஹீரோவாக விக்ரம் தான் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஷங்கர்-விக்ரம் காம்பினேஷன் அந்நியன் படத்தில் சூப்பராக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...